22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கத்தில் அஞ்சலி கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஈகை. இது அவரது ஐம்பதாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்திருக்கிறார் அஞ்சலி. அதையடுத்து சென்னை திரும்பி உள்ள ஈகை படக்குழு, விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. ஈகை படம் தவிர ராம்சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.