பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். படங்களில் நடிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், அதனை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வந்தார். அவருக்கு பதிலாக அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமின் முதல் பதிவாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை வெளிஉலகத்திற்கு பகிர்ந்திருந்தார். இது வைரலானது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் சாதனைப் படைத்துள்ளார். கணக்குத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பத்துலட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடரத் தொடங்கியுள்ளனர். இவ்வளவு விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகை நயன்தாராதான். இதற்கு முன், நடிகை கேத்ரினா கைபுக்கு 10 லட்சம் பாலோயர்கள் 24 மணி நேரத்தில் கிடைத்தது சாதனை அளவாக இருந்தது.