இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
வேகமாக வளர்ந்த வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து புகழ் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது உறவினர்கள் வாடகைக்கு விட முயற்சி செய்தனர். ஆனால் யாரும் அந்த வீட்டில் குடியேறத் தயங்கினர். விலைக்கு வாங்கிக் கொள்ளவும் யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகை அடா சர்மா அந்த வீட்டை வாங்க உள்ளார். அடா சர்மா பரபரப்பை கிளப்பி 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தவர், தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தார், 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அடா சர்மா “பணிகள் நடந்து வருகிறது. எல்லாம் முழுமையான பிறகு நானே முறைப்படி அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.