தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மறைந்த நடிகர் நல்லாண்டி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து 2021ல் வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் ‛கடைசி விவசாயி'. இந்த படத்திற்கு தேசிய விருதும், அதில் நடித்த நல்லாண்டிக்கு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
அவர் வெளியிட்ட நன்றி கடிதம் : மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், இப்படத்தினை உருவாக்க மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய் சேதுபதி மற்றும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றி.
தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் , சிறந்த தமிழ் திரைப்படமாக "கடைசி விவசாயி" தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு இந்தப் படம் மூலம் விருது கிடைத்துள்ளதால் தமிழ் திரைப்படத்துறைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் உயிரான விவசாயத்தை மையமாக வைத்து திரைப்படத்தை எடுத்து, மக்களை பெருமைப்படுத்தியதற்கும், தமிழ் திரைப்படத்தினை தேசிய அளவில் கொண்டு சென்ற அந்த திரைப்பட குழுவினருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.