நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பிரபல சின்னத்திரை நடிகையான வைஷாலி தனிகா விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைத்து வந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முகமாக வலம் வரும் வைஷாலி தனிகா ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார். அண்மையில், வைஷாலி தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் பயணித்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் வளைவில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், 'காரில் சீட் பெல்ட் போட்டிருந்ததால் தப்பித்தேன். இல்லையேல் பெரும் விபத்தாக மாறியிருக்கும். காரில் சீட் பெல்ட் போடுவதில் எனக்கு முதல் உடன்பாடு கிடையாது. ஆனால், இப்போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே, கட்டாயம் அனைவரும் சீட் பெல்ட் போடுங்கள். பைபாஸில், வளைவுகளில் கவனமாக செல்லுங்கள்' என தனக்கு கழுத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்தை காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.