போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு |
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அவர் தற்போது சினிமாவில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது குறித்து சர்ச்சையான கருத்தினை கூறியுள்ளார். அதாவது, 'சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. நடிகர்கள் படத்தில் புகைப்பிடித்தால் வரவேற்கிறோம். ஆனால், அதையே நடிகைகள் செய்தால் சர்ச்சையாகி விடுகிறது. நடிகைகள் திரையில் புகைப்பிடிப்பதாலேயே நிஜத்திலும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே செய்தாலும் அது அவர்களது தனிப்பட்ட விஷயம். நான் புகைப்பிடிப்பது போல் நடித்தது படத்தின் தேவை. அதற்காக நான் தனிப்பட்ட வாழ்விலும் அப்படித்தான் என்று அதை சர்ச்சையாக்குவது தவறு. காலம் மாறுகிறது. பெண்கள் புகைப்பிடித்தாலும் அதை முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும். வரவேற்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.