எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக அதிகமாக சினிமாவில் பேசப்படும் விஷயம் நடிகர்-நடிகைகளின் சம்பள விஷயம் தான். இப்போது இது குறித்து கியாரா அத்வானி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, "சம்பளம் விஷயத்தில் ஹீரோக்கள் விட ஹீரோயின்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இது குறித்து நீண்ட வருடங்களாக பேசி வந்தாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. நமது திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிப்பார்கள். ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு தருகிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது சம்பள விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது". என தனது கருத்துக்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.