அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் சூர்யாவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு பெயரை பெற்று தந்தன. அதுவும் ஓடிடியில் தான் வெளியானது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது சிவா இயக்கத்தில் ' கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, ‛‛ரசிகர்களிடம் தனது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, கங்குவா படம் நாம் நினைத்தது விட 100 மடங்கு நன்றாக வந்துள்ளது. சூர்யா 43வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. மேலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விடுதலை இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்கு பிறகு துவங்கும் . இது அல்லாமல் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக உருவாக்க லோகேஷ் கதை ஒன்றை கூறியுள்ளார். விரைவில் அது படமாகும். இதற்கு பிறகுதான் இரும்பு கை மாயாவி லோகேஷ் இயக்கத்தில் உருவாகும்" என தனது அடுத்த பட அப்டேட்களை கூறி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சூர்யா .