'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபகாலமாக மொபைலுக்கு வரும் அழைப்புகளில் நாம் ஓடிபி எண்ணை பகிர்ந்தால் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோய்விடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓடிபி எண்ணையே பகிராமல் தனது குடும்பத்தைச் சார்ந்த சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக பாடகி சின்மயி ஒரு பதிவு போட்டுள்ளார். மேலும், தொலைபேசிக்கு ஒரு லிங்க் வருவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற பண மோசடி வயதானவர்களை குறி வைத்தே நடப்பதாக தெரிவித்துள்ள சின்மயி, இந்த மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசில் தங்களது தரப்பினர் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .