ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சமீபகாலமாக மொபைலுக்கு வரும் அழைப்புகளில் நாம் ஓடிபி எண்ணை பகிர்ந்தால் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோய்விடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓடிபி எண்ணையே பகிராமல் தனது குடும்பத்தைச் சார்ந்த சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக பாடகி சின்மயி ஒரு பதிவு போட்டுள்ளார். மேலும், தொலைபேசிக்கு ஒரு லிங்க் வருவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற பண மோசடி வயதானவர்களை குறி வைத்தே நடப்பதாக தெரிவித்துள்ள சின்மயி, இந்த மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசில் தங்களது தரப்பினர் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .