பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
ரஜினி தனது மகனை நினைத்து பாடுவது போல் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. என் முகம் கொண்ட என் உயிரே, என் பெயருக்காக பிறந்தவனே, என் குணம் கொண்ட என் உலகே, எவனையும் தாண்டி சிறந்தவனே, எனக்கு பின் என்னை தொடர்பு கொண்டு நீயே, நான் நம்பத் தகுந்த நல்லவன் நீயே, புதல்வா புதல்வா வா, புதல்வா புதல்வா வா போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‛‛ரஜினிக்காக முதல் முறையாக பாடல் எழுதி உள்ளேன். என் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற தருணங்களுக்காகவே வாழ்கிறோம். நன்றி நெல்சன், அனிருத்,'' என்றார்.