ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? | ஜனநாயகன் முழு படம் வெளியான விவகாரம்; அதிகரிக்கும் ஆதரவு குரல் | 15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு | விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யா | பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ் | ஜனநாயகன் படம் லீக் : 500 கோடி பிஸினஸிற்கு பாதிப்பு, என்ன செய்ய போகிறார் விஜய்...? | 'ஜனநாயகன்' லீக் விவகாரம்: முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் லீக்: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
ரஜினி தனது மகனை நினைத்து பாடுவது போல் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. என் முகம் கொண்ட என் உயிரே, என் பெயருக்காக பிறந்தவனே, என் குணம் கொண்ட என் உலகே, எவனையும் தாண்டி சிறந்தவனே, எனக்கு பின் என்னை தொடர்பு கொண்டு நீயே, நான் நம்பத் தகுந்த நல்லவன் நீயே, புதல்வா புதல்வா வா, புதல்வா புதல்வா வா போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‛‛ரஜினிக்காக முதல் முறையாக பாடல் எழுதி உள்ளேன். என் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற தருணங்களுக்காகவே வாழ்கிறோம். நன்றி நெல்சன், அனிருத்,'' என்றார்.