மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
ரஜினி தனது மகனை நினைத்து பாடுவது போல் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. என் முகம் கொண்ட என் உயிரே, என் பெயருக்காக பிறந்தவனே, என் குணம் கொண்ட என் உலகே, எவனையும் தாண்டி சிறந்தவனே, எனக்கு பின் என்னை தொடர்பு கொண்டு நீயே, நான் நம்பத் தகுந்த நல்லவன் நீயே, புதல்வா புதல்வா வா, புதல்வா புதல்வா வா போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‛‛ரஜினிக்காக முதல் முறையாக பாடல் எழுதி உள்ளேன். என் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற தருணங்களுக்காகவே வாழ்கிறோம். நன்றி நெல்சன், அனிருத்,'' என்றார்.




