அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். 90 சதவிகிதம் பேர் அந்த ஆசையை மனதுக்குள் பூட்டி வைத்து விடுவார்கள், சிலர் தானாக வாய்ப்பு வரும் என்று காத்திருப்பார்கள், சிலர் வாய்ப்பு தேடுவார்கள், சிலர் ஜெயிப்பார்கள், பலர் தோற்பார்கள்.
குறிப்பாக டாக்டர்களிடையே ஆக்டராகும் ஆசை அதிகமாகவே இருக்கிறது. ஏற்கெனவே பல டாக்டர்கள் சினிமாவில் நடித்து வரும் நேரத்தில் ஈரோட்டை சேர்ந்த இளம் டாக்டர் ஆதித் சுந்தரேஸ்வரரும் நடிகராகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ‛‛எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். எங்கள் தலைமுறையின் முதல் டாக்டர் நான் தான். மெரிட்டில் தேர்வாகி சென்னை மருத்துவ கல்லூரியில் படித்தேன். அப்போது உடன் படித்த மாணவர்கள் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசையை தூண்டினார்கள். இதனால் கல்லூரி நாடகங்களில் நடித்தேன். நடனம், நடிப்பு கற்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். வசனமே இல்லா அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்தேன்.
‛தூரிகையே ஓவியமானதே' என்ற குறும்படத்தில் நடித்தேன். அதன் மூலம் பல குறும்பட வாய்ப்புகள் கிடைத்தது. மிஷ்கின் உதவியாளர் மீனா குமாரி இயக்கிய 'பாசு பேபி' என்ற வெப் தொடரில் நடித்தேன். 'நேற்று நீ இன்று நான்' படத்தில் ஹீரோவாக நடித்தேன். தற்போது சேரன் இயக்கும் வெப் தொடரில் நடித்து வருகிறேன். அதோடு 'ஆயிரம்கால் மண்டபம்' என்ற படத்திலும் நடித்து வருகிறேன்'' என்றார்.