விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அவை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் படம் பேபி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியானது. இந்த படம் முதல் நாளிலிருந்தே வரவேற்பையும் வசூலையும் பெற துவங்கியது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டாவும் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன் பேசும்போது, 'நான் இங்கே புஷ்பா-2 படத்தைப் பற்றி பேச வரவில்லை. இருந்தாலும் இந்த வெற்றியை பார்க்கும்போது புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை இங்கே பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவர், “இங்கே எல்லாமே ஒரே கட்டளையால் செய்து முடிக்கப்படும். அது புஷ்பாவின் கட்டளை” என்று கூறினார்.
புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் வசனத்தையே அல்லு அர்ஜுன் கூறியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.