என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி சார்பில் வாராஹி என்ற யாத்திரையை தொடங்கினார். அப்போது அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் ஆந்திரா அமைச்சரும், நடிகையுமான ரோஜா, நடிகர் பவன் கல்யாணை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் கூறுகையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி அவர் கற்றுக் கொடுத்தால் அது சன்னி லியோன் வேதம் ஓதியது போல் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அமைச்சர் ரோஜாவின் இந்த கருத்துக்கு பவர் கல்யாண் ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் சன்னி லியோனும் ரோஜாவுக்கு சோசியல் மீடியாவில் ஒரு பதிலடி கொடுத்து அதை அவருக்கு டேக் செய்திருக்கிறார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒரு ஆபாச பட நடிகை தான். ஆனபோதிலும் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைப் போல் அல்லாமல் நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாசமாக நடிப்பதை விட்டு வெளியேறி விட்டேன். ஆனால் நீங்கள் அந்த உலகத்திற்குள் தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்று ரோஜாவுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் சன்னி லியோன். அவரது இந்த கருத்து ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.