3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார். அதற்கான ஆயத்த பணிகளை விரைந்து செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்க கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் நீலாங்கரையில் உள்ள தனது பங்களாவில் இருந்து கூட்டம் நடக்கும் பனையூருக்கு காரில் சென்றார். இதனை பல செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அப்போது அவர் ஒரு சிக்னலில் நிற்காமல் சென்றது பதிவானது. சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதனால் விஜய் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து அதுதொடர்பான ரசீதை விஜய்க்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அபராத தொகையை விஜய் செலுத்தி உள்ளார்.