முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஜி.எம்.தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
20 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தை, பதிவுத்துறையில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிகொள்ள கருணாநிதி முதல்அமைச்சராக இருந்தபோது பையனூரில் இடம் வழங்கப்பட்டது. அதனை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்படும்.
2013 - 2014ம் ஆண்டுகளில் மானியத்தொகைக்காக விண்ணப்பித்த திரைப்படங்களில் விடுபட்ட திரைப்படங்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசின் கொண்டு செல்லப்படும்.
தயாரிப்பாளர்களை அவமதிக்கும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது.
திரைப்படம் வெளியான அன்றைய தினமே திரைப்படங்களின் விமர்சனங்களை மோசமாக ஒளிபரப்பு செய்யும் நபர்கள் மீது கண்டிப்பாக தொழில் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.
தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் 5 நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.