ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும்.. இந்தப்படத்தை பிரபல மலையாள கதாசிரியர் சச்சிதானந்தம் என்கின்ற சாச்சி இயக்கி இருந்தார். இந்தப்படம் வெளியான சில மாதங்களில் 49 வயதே ஆன சாச்சி திடீரென மரணமடைந்தார்.. அந்த சமயத்தில் அவர் அடுத்ததாக தனது கனவுப்படமாக எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலையை செய்து முடித்திருந்தார். ஆனாலும் அவரது கனவு நனவாகாமலேயே மரணத்தை தழுவினார்.
அதே சமயம் நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என முடிவு செய்து இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெயன் நம்பியார் என்கிற அறிமுக இயக்குநருக்கு வழங்கினார். இந்த ஜெயன் நம்பியார் ஏற்கனவே பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான 'லூசிபர்' படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதுமட்டுமல்ல, சாச்சி இயக்கிய அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்களிலும் கூட முதன்மை இணை இயக்குனராக பணியாற்றியவர் தான்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தொடங்கி அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிரித்விராஜ் ஒரு பக்கம் டைரக்சன் மற்றும் இன்னொரு பக்கம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருவதால் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் 50 நாட்கள் கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். இதுவும் சாச்சி கதை எழுதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்கள் போல ஈகோ பின்னணியில் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.