படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 68வது படத்தின் அறிவிப்பு வெளியானது. பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அது விஜய் 68ல் முன்னதாகவே நடந்துவிட்டது. இதனால், 'லியோ' படத்திற்குத் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கருதினார்கள்.
மேலும், ஒரு நிகழ்ச்சியில் பேசிய 'லியோ' படத் தயாரிப்பாளர் லலித்குமார் 'வாரிசு' படம் வெளிவருவதற்கு முன்பே 'லியோ' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்ததாகவும், ஆனால், 'வாரிசு' வெளிவரும் வரை 'லியோ' பற்றி வெளியில் எதையும் அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று 'ரெஜினா' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் 68 இயக்குனரான வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவர் பேசும் போது ரசிகர்கள் 'விஜய் 68 அப்டேட்' என சத்தமிட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “லியோ' வந்த பிறகு கொடுக்கலாம், அப்புறம் விஜய் சாரே திட்டுவாரு. ஏன்டா, நீ போய் எல்லா இடத்துலயும் அப்டேட் கொடுக்கறன்னு கேப்பாரு. அதனால, 'லியோ' வந்த பிறகு 'தளபதி 68' அப்டேட்,” எனக் கூறினார்.
அதனால், 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளிவரும் வரை அடுத்த நான்கு மாதங்களுக்கு 'விஜய் 68' படத்தின் அப்டேட் வர வாய்ப்பில்லை.