25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 68வது படத்தின் அறிவிப்பு வெளியானது. பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அது விஜய் 68ல் முன்னதாகவே நடந்துவிட்டது. இதனால், 'லியோ' படத்திற்குத் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கருதினார்கள்.
மேலும், ஒரு நிகழ்ச்சியில் பேசிய 'லியோ' படத் தயாரிப்பாளர் லலித்குமார் 'வாரிசு' படம் வெளிவருவதற்கு முன்பே 'லியோ' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்ததாகவும், ஆனால், 'வாரிசு' வெளிவரும் வரை 'லியோ' பற்றி வெளியில் எதையும் அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று 'ரெஜினா' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் 68 இயக்குனரான வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவர் பேசும் போது ரசிகர்கள் 'விஜய் 68 அப்டேட்' என சத்தமிட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “லியோ' வந்த பிறகு கொடுக்கலாம், அப்புறம் விஜய் சாரே திட்டுவாரு. ஏன்டா, நீ போய் எல்லா இடத்துலயும் அப்டேட் கொடுக்கறன்னு கேப்பாரு. அதனால, 'லியோ' வந்த பிறகு 'தளபதி 68' அப்டேட்,” எனக் கூறினார்.
அதனால், 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளிவரும் வரை அடுத்த நான்கு மாதங்களுக்கு 'விஜய் 68' படத்தின் அப்டேட் வர வாய்ப்பில்லை.