20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா, சிவாவிற்கு முன்பே திரையுலகில் நடிகராக அடி எடுத்து வைத்தவர். அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். பின்னர் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம் மலையாள திரை உலகில் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்னை தொடர்பாக மிகவும் சிக்கலான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி, தற்போது முன்பு போல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வு பற்றி பாலா கூறியுள்ளார்.
அதில், “டாக்டர்கள் நான் பிழைப்பதற்கு வாய்ப்புகள் ரொம்பவே குறைவு என்றும் அறுவை சிகிச்சை செய்தாலும் அது எந்த அளவுக்கு வெற்றி தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் என்னை பார்க்க வந்த என்னுடைய சகோதரர் சிவா மற்றும் என்னுடைய சகோதரி இருவரிடமும் கூறினார். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். அந்த சமயத்தில் என்னுடைய சகோதரி, என்னுடைய டாக்டரிடம் இதுவே உங்களது சகோதரராக இருந்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த டாக்டர் அவரை நிம்மதியாக சாக விடுவேன் என்று இன்னொரு அதிர்ச்சிகரமான பதிலை கூறினார். இதை தொடர்ந்து இது பற்றி மீடியாவுக்கு கூட அவர்கள் அறிக்கை கொடுப்பதற்கு தயாராகினர்.
ஆனால் அடுத்து வந்த சில மணி நேரங்களில் என்னுடைய உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு அதன்பிறகு இதோ முன்புபோல் தேறி இப்போது உங்கள் முன்னால் பழைய பாலாவாக திரும்பி வந்துள்ளேன். இந்த சமயத்தில் என் நண்பர்களையும் தாண்டி நான் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சிலர் அதையெல்லாம் மறந்துவிட்டு என்னை பார்ப்பதற்காகவே மருத்துவமனைக்கு வந்து சென்ற நிகழ்வு என்னை நெகிழ வைத்தது.
எனக்கும் நடிகர் உன்னி முகுந்தனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை நான் ஒரு சகோதரராகத்தான் கருதுகிறேன். ஆனால் முதல் ஆளாக அவர்தான் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து சென்றார். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் பாலா.