நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கன்னடத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'காந்தாரா' திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. தற்போது 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகத்தை அதன் முன்னுரை படமாக எடுக்க உள்ளார் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி. அதற்கான எழுத்து வேலைகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, தனது மனைவி, குழந்தைகளுடன், கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாதேஷ்வரா, மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி உள்ளார். அது பற்றிய புகைப்படங்களை அவரது மனைவி பிரகதி பகிர்ந்துள்ளார். தங்களது குழந்தைகளுக்கு முடி காணிக்கையும் செலுத்தி உள்ளார்கள்.
“சமீபத்தில் நாங்கள் குடும்பத்துடன் தர்மஸ்தலா, குக்கி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசித்து ஆசி பெற்றோம்,” என பிரகதி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் மஞ்சுநாதேஸ்வரா என அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் கோவில் உள்ளது. கர்நாடகாவின் மங்களூர் அருகில் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. குமாரமலை என்றழைக்கப்படும் அங்குதான் இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்தார் என்பது ஐதீகம்.