நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
ஹிந்தியில் அறிமுகமாகி தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறவர் அதா சர்மா. தமிழில் ‛இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2' படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படமான ‛செல்பி' சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் அதா சர்மா நடித்துள்ள ஒரு படம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. அது ‛தி கேரளா ஸ்டோரி'.
‛‛கேரளா ஸ்டோரி படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரின் ஏற்பாட்டின் பேரில் கதையில் குறிப்பிடப்படும் பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்டறிந்தேன். அழகான குடும்பங்களில் இருந்து அவர்கள் ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதையை கேட்டு கலங்கினேன்.
படம் பற்றி வரும் புகார்களையும், விமர்சனங்களையும் நான் அறிவேன். 2 நிமிட டிரைலரை பார்த்து விட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம். இரண்டு மணி நேர படத்தை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இந்த படத்தில் நடித்தற்காக கேரளாவை சேர்ந்த பெண்கள்கூட எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் அரசியல் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பயங்கரவாத்தையும், மனிதநேயத்தையும் பேசுகிறது. கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் விமர்சனங்களை வரவேற்போம்''. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.