தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
சென்னை அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. கடந்த மூன்று வருடங்களாக கொரானோ தாக்கத்தால் சென்னையில் பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
தோனி கலந்து கொள்ளும் கடைசி பிரிமியர் கிரிக்கெட் தொடர் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் சென்னையில், சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வயது வித்தியாசம் இன்றி வெளியூர்களில் இருந்து கூட ரசிகர்கள் நேற்று சென்னை வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
சினிமா பிரபலங்களிடமும் சென்னை அணிக்கு அதிக ஆதரவு உண்டு. நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியை தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரிஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.