தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் |
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாராகி உள்ள கப்ஜா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா. உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது ஸ்ரேயாவும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛கப்ஜா படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ஷங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த போது சினிமா குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார். தன்னுடைய வெற்றியை எப்போதும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பதை அவரைப் பார்த்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றார் ஸ்ரேயா.