அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாராகி உள்ள கப்ஜா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா. உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது ஸ்ரேயாவும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛கப்ஜா படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ஷங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த போது சினிமா குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார். தன்னுடைய வெற்றியை எப்போதும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பதை அவரைப் பார்த்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றார் ஸ்ரேயா.