திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாராகி உள்ள கப்ஜா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா. உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது ஸ்ரேயாவும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛கப்ஜா படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ஷங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த போது சினிமா குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார். தன்னுடைய வெற்றியை எப்போதும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பதை அவரைப் பார்த்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றார் ஸ்ரேயா.