ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
நடிகை, பின்னணி பாடகி என இரண்டு பாதைகளில் பயணித்து வரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் மகளிர் தினம் என்பதால் நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார் ஆண்ட்ரியா. அந்த பதிவில், பெண்ணாக இருப்பதற்கு என்றென்றும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு அருகே உடை அணியாமல் ஒரு போர்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், நல்லதொரு உடை அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இப்படி ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கலாமே என்று ஆண்ட்ரியாவை விமர்சனம் செய்தனர். பலரும் அவரின் தனிப்பட்ட உரிமை என ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.