‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை, பின்னணி பாடகி என இரண்டு பாதைகளில் பயணித்து வரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் மகளிர் தினம் என்பதால் நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார் ஆண்ட்ரியா. அந்த பதிவில், பெண்ணாக இருப்பதற்கு என்றென்றும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு அருகே உடை அணியாமல் ஒரு போர்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், நல்லதொரு உடை அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இப்படி ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கலாமே என்று ஆண்ட்ரியாவை விமர்சனம் செய்தனர். பலரும் அவரின் தனிப்பட்ட உரிமை என ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.