பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
1990களில் பிசியாக இருந்தவர் நடிகை நக்மா. தமிழில் காதலன் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். தற்போது நடிப்பை விட்டு விலகி இருக்கும் நக்மா காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் நக்மாவுக்கு சமீபத்தில் போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த லிங்கை நடிகை நக்மா கிளிக் செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் வாடிக்கையாளரின் விவரம் புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். உஷாரான நக்மா வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கவில்லை. என்றாலும் சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். குறுஞ்செய்தியை கிளிக் செய்து மோசடி பேர்வழிகளின் போனை அட்டர்ன் பண்ணினாலே அவர்களால் வங்கி கணக்க விபரங்களை பெற்று விட முடியும் என்கிறார்கள். இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்வேதா மேனன் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.