கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பத்து தல' மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'முப்தி' என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.
இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் கிருஷ்ணா பேசியதாவது : இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது.
இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90 சதவிகிதம் வேறாக கொடுத்திருக்கிறேன். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது.
நான் எது கேட்டும் ரஹ்மான் நோ சொன்னதே கிடையாது. கடைசி நேரத்தில் அவர் 'நம்ம சத்தம்' லிரிக்கல் வீடியோவில் சிறப்புத் தோற்றத்தில் ஷூட் செய்து அனுப்பினார். அவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை மேடையில் பாட உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.