இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தற்போது குணச்சித்திரனார் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. அந்தப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து புலிவால் என்கிற படத்தை இயக்கிய மாரிமுத்து இன்னொரு பக்கம் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதை தொடர்ந்து தற்போது பிஸியான குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தற்போது. தொலைக்காட்சி சீரியல் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் பல வில்லன்களில் இவரும் ஒருவராக நடித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனியும் இவரும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். ஆனால் சமுத்திரகனியை விட மாரிமுத்து சற்று வயதானவராக தெரிவதால் அவரை அண்ணனாகவும் சமுத்திரக்கனியை தம்பியாகவும் மாற்றிய ஷங்கர், அதேபோல நல்லவனாக இருந்த அண்ணன் கதாபாத்திரத்தையும் வில்லனாக மாற்றி தம்பியை நல்லவனாக மாற்றி விட்டாராம். இந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மாரிமுத்துவே கூறியுள்ளார்.