தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
துணிவு படத்தை அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த படத்தின் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே தான் இயக்கிய நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு ஆக்சன் கதையை கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு விக்னேஷ் சிவன் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடித்த நயன்தாராவே இந்த படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.