ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துணிவு படத்தை அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த படத்தின் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே தான் இயக்கிய நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு ஆக்சன் கதையை கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு விக்னேஷ் சிவன் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடித்த நயன்தாராவே இந்த படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.