விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

துணிவு படத்தை அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த படத்தின் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே தான் இயக்கிய நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு ஆக்சன் கதையை கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு விக்னேஷ் சிவன் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடித்த நயன்தாராவே இந்த படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.