தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் |

தற்போது இந்தியா முழுக்கவே சரித்திர கதைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. தமிழில்கூட பொன்னியின் செல்வன் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வரலாறு 'மருது ஸ்கொயர்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனை ஊமை விழிகள், உழவன் மகன் படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். தற்போது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இதில் ஜே.எம்.பஷீர் என்பவர் முத்துராமலிங்க தேவராக நடிக்கிறார். அவரே 'மருது ஸ்கொயர்' படத்தில் பெரிய மருதுவாக நடிக்கிறார். மருது சகோதரர்களின் தலைவியாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் கேரக்டரில் 2019ல் மிஸ்.மெட்ராஸ் டைட்டில் வென்ற ஆயிஷா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
பொதுவாக மருது சகோதரர்களின் சரித்திர கதையை படமாக்க பல நூறு கோடிகள் வேண்டும். சிறிய தயாரிப்பு நிறுவனத்தால் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




