ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் ராமராஜன் உடன் ‛எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாந்தி பிரியாவிற்கு தற்போது 54 வயது. இவர் நடிகை பானுப்ரியாவின் சகோதரி. அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருக்கும் சாந்தி பிரியா, தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்திபிரியா, இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதை குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.