கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் முதல்கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. என்றாலும் அது குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்கள்.
அந்த வகையில் விஜய் 67வது படத்தில் அவருடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கே ஜி எப்- 2 படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் 67வது படத்திலும் முக்கிய வில்லனாக நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு நடித்த கே ஜி எப்- 2 படத்தில் நடிப்பதற்கும் இதே 10 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.