சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த நிலைகளில் அடுத்தபடியாக ரஜினியிடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், ‛ஜெய்பீம்' ஞானவேல் உள்ளிட்ட பலர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி தேர்வு செய்துவிட்டாராம். அதாவது ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், அடுத்தபடியாக அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.