தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தபோது சில பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்த படத்தை கிடப்பில் போட்டது லைகா நிறுவனம். இதன் காரணமாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கத் தயாரானார் ஷங்கர். இதையடுத்து அவருக்கும் லைகா நிறுவனத்திற்க்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்ற வரை சென்றது. அதில் ஷங்கருக்கு சாதகமான தீர்ப்பு வரவே ராம்சரண் நடிக்கும் 15 ஆவது படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதை அடுத்து இந்தியன்- 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது இந்தியன்-2, ராம்சரண் -15 ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர். இதனால் வேகமாக நடைபெற்று வந்த ஆர்சி -15 படப்பிடிப்பு தற்போது தாமதமாகி வருகிறது. அதோடு ஆர் சி 15 படத்தில் விஷுவல் எபக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் செய்முறை பல மாதங்கள் நீடிக்க என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் முடிவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தற்போது அப்படத்தை 2024 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு முடிவு செய்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர் சி -15 படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், ஒரு முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடித்து வருகிறார்.