நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். அதையடுத்து மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சென்னை வந்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து விட்டார். அவரை இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே ரசிகர்களிடம் வீடியோ மூலமாக அவர் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று சுசீந்திரன் தனது கைப்பட எழுதி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.