காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். அதையடுத்து மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சென்னை வந்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து விட்டார். அவரை இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே ரசிகர்களிடம் வீடியோ மூலமாக அவர் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று சுசீந்திரன் தனது கைப்பட எழுதி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.