கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று தியேட்டர்களில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது
காஷ்மீரில் கடந்த 1990-ல் கிட்டத்தட்ட 32 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதின் நினைவு தினமான இன்று (ஜன-19 ) இந்த படத்தை மீண்டும் வெளியிடுவது சரியானதாக இருக்கும் என்பதாலேயே இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணியவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படம் வெளியான ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்படும் சாதனையையும் காஷ்மீர் பைல்ஸ் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.