20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இயக்குனர் வெற்றி மாறன் ஓடிடியில் வெளியிடுவதற்கென்று படம் தயாரிக்கிறார், வெப் தொடர் தயாரிக்கிறார். ஓடிடி தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்களில் முக்கியமானவராக இருக்கிறார். என்றாலும் ஓடிடியிலும் இயக்குனர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதுகுறித்து கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது. ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம்.
இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்க வேண்டும் என்று இயக்குனர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும்.
இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.