துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கிறார்கள். இதுதவிர் அவர் நடித்துள்ள பதான் படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் தனது சமூகவலைதளத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பெற்றால் அதை தன்னிடம் ஒரு முறை தருமாறும், அதை ஒரே ஒரு முறை தான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரணிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார் ஷாருக்கான்.
அதையடுத்து ராம்சரண், நிச்சயமாக சார். விருது பெற்றால் அது இந்திய சினிமாவின் உடையது என்று அவருக்கு ட்விட்டரில் ஒரு பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது பெற்றுள்ளது. இந்திய திரைப்பட பாடல் ஒன்று குளோடன் குளோப் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து இந்த ஆஸ்கர் விருது போட்டியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மற்ற இந்திய படங்களுக்கும் பல தளங்களிலும் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.