‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசைனார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார். ஆனால் அதுபற்றி பொதுவெளியில் அதிகம் பேசிக்கொள்ளாத சமந்தா படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான வேலைகளில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த யசோதா திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக அவர் நடித்து சாகுந்தலம் என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சமந்தா பழைய சுறுசுறுப்புடன் பணிக்கு திரும்பியுள்ளார். அந்தவகையில் தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார் சமந்தா. இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ள, “கலை தான் நம்மிடம் உள்ள அனைத்து வருத்தங்களையும் நோய்களையும் குணப்படுத்தும் ஒன்று” என்று கூறியுள்ளார்.