100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசைனார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார். ஆனால் அதுபற்றி பொதுவெளியில் அதிகம் பேசிக்கொள்ளாத சமந்தா படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான வேலைகளில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த யசோதா திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக அவர் நடித்து சாகுந்தலம் என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சமந்தா பழைய சுறுசுறுப்புடன் பணிக்கு திரும்பியுள்ளார். அந்தவகையில் தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார் சமந்தா. இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ள, “கலை தான் நம்மிடம் உள்ள அனைத்து வருத்தங்களையும் நோய்களையும் குணப்படுத்தும் ஒன்று” என்று கூறியுள்ளார்.