லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
1967ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி, சென்னையில் பிறந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தன் அப்பா இசை துறையில் இருந்ததால் அவரைப்போலவே தானும் இசையின் மீது நாட்டம் கொண்டு இசை துறைக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை மேதைகளின் உதவியாளராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திறமையை பார்த்து வியந்த இயக்குநர் மணிரத்னம், தனது ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
முதல்படமே சூப்பர் ஹிட்டாக, அனைவரின் பார்வையும் ரஹ்மான் பக்கம் திரும்பியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்தவர் ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க துவங்கினார். இந்தியாவின் 50வது ஆண்டு சுதந்திர நாளையொட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' இசைத் தொகுப்பு இன்றுவரை ஓயவில்லை.
அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த. தமிழ் கலைஞனின் புகழ் உலகம் முழுக்க பரவியது. ஆஸ்கர் விருது மட்டுமல்லாது .கோல்டன் குளோப், கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். நான்கு முறை தேசிய விருதுகள், இந்தியாவின் பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் குவித்துள்ளார். இசையுலகில் இவ்வளவு பெருமையும் சாதனையும் படைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.