இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‛ஆர்ஆர்ஆர்'. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த இந்த படம் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 2023 ஆஸ்கர் போட்டியிலும் நேரடியாக பங்கேற்கிறது. இதுதவிர கோல்டன் குளோப் விருது பிரிவிலும் இரண்டு விருதுகள் பிரிவில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் 'நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம்' என்ற குழு 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விழாவில் தனது மனைவி உடன் பங்கேற்றார் ராஜமவுலி.
விழாவில் பேசிய அவர், ‛‛இந்த விருதை பெறுவது மகிழ்ச்சி. தென்னிந்தியாவில் இருந்து வந்த சிறிய படத்தை நிறைய பேர் கவனிக்க வைத்துள்ளீர்கள். வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தியேட்டர்களில் பார்வையாளர்களை பார்த்தபோது அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி, பிரமிப்பு இருந்தது. தியேட்டர்களில் படம் பார்க்கும் மகிழ்ச்சியையே விரும்புகிறேன்'' என்றார் ராஜமவுலி.