'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாள திரையுலகில் பிரேமம், நேரம் என்கிற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் கோல்ட் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் நர்ஸ் ஒருவர் ஹோட்டலிலிருந்து வரவழைத்த கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்டு உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள அல்போன்ஸ் புத்ரன், தானும் இதுபோன்ற ஒரு நிலைக்கு ஆளானதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “15 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் நடிகர் ஷராபுதீன் (பிரேமம் படத்தில் அறிமுகமானவர்) எனக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக எனக்கு சவர்மா வாங்கிக் கொடுத்தார். அதை சாப்பிட்ட பின்னர் மறுநாள் காலையிலேயே நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்தேன். அதிலிருந்து நான் குணமடைந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை மருத்துவ செலவு ஆனது. காரணம் கெட்டுப்போன அந்த உணவு புட் பாய்சன் ஆக மாறியதுதான்.
ஒருகட்டத்தில் எனக்கு ட்ரீட் கொடுத்த ஷராபுதீன் மேல் கூட கோபம் வந்தது. ஆனால் உண்மையான கோபம் யார் மீது வர வேண்டும் ? அந்த 70 ஆயிரம் ரூபாய்க்காக என் பெற்றோர் பல பேரிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி செலவு செய்து என்னை காப்பாற்றினர். மீடியாக்கள் கேள்வி எழுப்ப வேண்டியது இது போன்ற விஷயங்களில் தான்: என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்