ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து தற்போது ‛பத்து தல' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது. அதோடு பத்து தல படத்திற்குப் பிறகு கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் அடுத்த படியாக சிம்பு நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனபோதிலும் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அதேசமயம் சிம்பு தற்போது மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை கேட்டுள்ளார். அதனால் அடுத்தபடியாக சிம்பு எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில், தற்போது சிம்பு ஒரு தற்காப்பு கலையின் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக இந்த பயிற்சியில் அவர் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.