நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து தற்போது ‛பத்து தல' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது. அதோடு பத்து தல படத்திற்குப் பிறகு கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் அடுத்த படியாக சிம்பு நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனபோதிலும் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அதேசமயம் சிம்பு தற்போது மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை கேட்டுள்ளார். அதனால் அடுத்தபடியாக சிம்பு எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில், தற்போது சிம்பு ஒரு தற்காப்பு கலையின் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக இந்த பயிற்சியில் அவர் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.