ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
2022ம் ஆண்டில் வெளிவந்த கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' இரண்டு வாரங்களுக்குப் பிறகு மற்ற மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது. அப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் பிரபலமானார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த 2022ம் ஆண்டில் அவருக்கப் பிடித்த சில படங்களைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த ஆண்டில் என்னுடைய அபிமானத் திரைப்படம் புனித் ராஜ்குமார் நடித்த டாகுமென்டரி படமான 'கந்தடா குடி'. அந்தப் படத்துடன் என்னால் எமோஷனலாக தொடர்பு கொண்டதே அதற்குக் காரணம். மறைந்த புனித் ராஜ்குமாரை கடைசியாக திரையில் பார்த்தது எனக்கு ஒரு எமோஷனலான தருணம்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'லவ் டுடே' ஒரு நல்ல படம். அது போல பல கன்னடப் படங்களும் உண்டு. '777 சார்லி' அதில் எனது அபிமானத் திரைப்படம். அப்படத்தை நான் தேர்வு செய்தால் அது என்னுடைய நண்பனின் படம் அதனால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், இந்த வருடத்தின் மிகச் சிறந்த எமோஷனலான படம் அது. கன்னடத் திரையுலகத்திற்கு இப்படியெல்லாம் ஆரம்பமாக 'கேஜிஎப் 2' தான் காரணம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,” என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.