ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
15வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிட சீனு ராமசாமியின் 'மாமனிதன்', கார்த்திக் சுவாமிநாதனின் 'முகிழ்', ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் 'இரவின் நிழல்', கவுதம் ராமச்சந்திரனின் 'கார்கி', மற்றும் எம் பத்மகுமாரின் 'விசித்திரன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
இதை தவிர சஞ்சீவ் ஹசாரிகா இயக்கத்தில் ரினிகி புயன் சர்மா தயாரித்த அசாமிய திரைப்படமான 'போகுல் புலோர் டோரே', சிதம்பர பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'தி ஒன் அண்ட் தி மெனி வித்தின்', சௌம்யாஜித் மஜும்தாரின் பெங்காலி படம் 'ஹோம்கமிங்', கிரீஷ் மோஹிதேவின் மராத்தி படம் 'தாத் கானா', ஜோஷி மேத்யூவின் 'நெஸ்ட் ஆஃப் சோரோஸ்' மலையாளப் படம், ஷெர்ரி மற்றும் தீபேஷ் டியின் மலையாளப் படம் 'அவனோவிலோனா' மற்றும் இஷான் கோஸின் பெங்காலி படம் 'ஜில்லி' ஆகியவையும் திரையிடப்படுகிறது.
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரச்சார சுடர் நிகழ்ச்சி நடந்தது. அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பார்த்திபன், சீனு ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.