டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
15வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிட சீனு ராமசாமியின் 'மாமனிதன்', கார்த்திக் சுவாமிநாதனின் 'முகிழ்', ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் 'இரவின் நிழல்', கவுதம் ராமச்சந்திரனின் 'கார்கி', மற்றும் எம் பத்மகுமாரின் 'விசித்திரன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
இதை தவிர சஞ்சீவ் ஹசாரிகா இயக்கத்தில் ரினிகி புயன் சர்மா தயாரித்த அசாமிய திரைப்படமான 'போகுல் புலோர் டோரே', சிதம்பர பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'தி ஒன் அண்ட் தி மெனி வித்தின்', சௌம்யாஜித் மஜும்தாரின் பெங்காலி படம் 'ஹோம்கமிங்', கிரீஷ் மோஹிதேவின் மராத்தி படம் 'தாத் கானா', ஜோஷி மேத்யூவின் 'நெஸ்ட் ஆஃப் சோரோஸ்' மலையாளப் படம், ஷெர்ரி மற்றும் தீபேஷ் டியின் மலையாளப் படம் 'அவனோவிலோனா' மற்றும் இஷான் கோஸின் பெங்காலி படம் 'ஜில்லி' ஆகியவையும் திரையிடப்படுகிறது.
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரச்சார சுடர் நிகழ்ச்சி நடந்தது. அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பார்த்திபன், சீனு ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.