நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
பிக்பாஸ் சீசன் 4-ல் ஷிவானி நாரயணனுக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் இடையே ஆரம்பத்தில் லவ் ட்ராக் ஆரம்பமானது. ஆனால், அதற்குள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஷிவானியின் அம்மா, ஷிவானியை கண்டித்தார். அதன்பின் அந்த விவகாரம் குறித்து பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஷிவானியும், பாலாஜியும் தங்களது நட்பை வளர்த்தனர். ஒருகட்டத்தில் ஷிவானியின் தாயாரும் பாலாஜியை புரிந்துகொள்ள மூவரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து செல்பி புகைப்படங்கள் எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் பர்த்டே பார்ட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில், ஷிவானியுடன் அவரது தயாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது வைரலாகி வரும் நிலையில் 'மருமனுடன் செல்பியா' என ஷிவானியின் அம்மாவை ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.