இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
'சந்திரலேகா' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார் நடிகை ஸ்வேதா பண்டேகர். சுமார் 8 வருடங்களாக ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக நீண்ட சீரியல் என்கிற சாதனையை படைத்திருந்தது. இந்த சீரியலானது சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றது.
இந்நிலையில், அவர் தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான கதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாறாக, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது காதல் கதையை அப்டேட்டாக கொடுத்துள்ளார் ஸ்வேதா.
ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்' என பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பிய படி நிற்கிறார். எனவே, அவரை யார் என்று தெரிந்து கொள்ள முடியாத ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ஸ்வேதாவிடம் அவர் யார்? எப்போ ரிவீல் பண்ணுவீங்க? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.