பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் | 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் | மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம் | தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் | 2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி' |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடிக்க 2015ல் வெளிவந்த பேய்ப் படம் 'டிமான்டி காலனி'. தனது அறிமுகப் படத்திலேயே யார் இவர் என கவனிக்க வைத்தவர் அஜய் ஞானமுத்து. அடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த 'கோப்ரா' படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தது.
அடுத்ததாக 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகப்படப்பிடிப்பை நேற்று முதல் ஆரம்பித்துள்ளார் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தில் நடித்த அருள் நிதி கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அருள்நிதி நடித்து இந்த ஆண்டில் 'டி பிளாக், தேஜாவு, டைரி' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'ராட்சசி' படத்தை இயக்கிய கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் அருள்நிதி அடுத்து 'டிமான்டி காலனி 2' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்படத்தை அருள்நிதியே தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் படத்தின் இயக்குனரான ஞானமுத்து மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.




