சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர் தற்போது பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.