ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர் தற்போது பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.




