'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
பழம்பெரும் காமெடி நடிகர் சந்திரபாவுக்கு நேரடி வாரிசு யாருமில்லை. தூத்துக்குடியை சேர்ந்த சந்திரபாபு, குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் சாரத் என்ற இளைஞர். உறவு முறையில் சந்திரபாபுவின் பேரன். தாத்தா பெயரிலேயே சந்திரபாவு பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தெற்கத்தி வீரன் என்ற படத்தை தயாரித்து, இயக்கி, அதில் தானே நாயகனாகவும் நடிக்கிறார்.
சாரத்தின் நண்பர்களாக ‛முருகா' அசோக், ‛நாடோடிகள்' பரணி, ‛மாரி' வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி சாரத் கூறியதாவது: தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே தெற்கத்தி வீரன் கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள் அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது. இன்றும் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம் என்றார்.