இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
‛தேவராட்டம்' படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் தங்களது காதலை அறிவித்தனர். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது திருமணம் பற்றி அறிவித்து வாழ்த்து பெற்றனர்.
இவர்களின் திருமணம் சென்னையில் இன்று(நவ., 28) எளிய முறையில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடந்தது. திருமணத்தின் போது கவுதம் பட்டு, வேஷ்டி சட்டையையும், ஐவரி நிறத்திலான பட்டுப்புடவையை மஞ்சிமாவும் அணிந்து இருந்தனர். திருமணம் செய்த மணமக்களை திரையுலகினர்கள், ரசிகர்கள் வாழ்த்தினர்.