Advertisement

சிறப்புச்செய்திகள்

சென்னையில் 2 நாட்கள் பிக்கி மாநாடு : கமல் பங்கேற்கிறார் | பாலுமகேந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி : இளையராஜா பங்கேற்பு | ஹாட்ரிக் வெற்றியில் ராஷ்மிகா மந்தனா | கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி | சம்பளமா... இசை உரிமையா... எது வேண்டும்? : மலையாள தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு | ரீ ரிலீஸில் வசூலை அள்ளும் சனம் தேரி கசம் : தயாரிப்பாளர், இயக்குனர் உரிமை மோதல் | மதராஸி - மீண்டும் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயன் | பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான் | சீரியல்களுக்கு பாட்டு எழுதுவது தான் கஷ்டம் - பா.விஜய் | 101 வயதில் மறைந்த தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திறமையான இயக்குனர்களால் தான் நல்ல நடிகர்களை உருவாக்க முடியும் : எஸ்.ஜே.சூர்யா

23 நவ, 2022 - 01:40 IST
எழுத்தின் அளவு:
Tallent-directors-can-make-good-actors-says-SJ-Surya

ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் வெப் தொடர் வதந்தி. புஷ்கர், காயத்திரி தயாரித்திருக்கும் இந்த வெப் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 2ம் தேதி முதல் வெளியாகிறது.

இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது: இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன்முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம், ‛நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா' என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் 'வதந்தி' எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். 'உண்மை நடக்கும். பொய் பறக்கும்' என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹனுமேன் ஒரு சர்வதேச திரைப்படம் : இயக்குனர் தகவல்ஹனுமேன் ஒரு சர்வதேச திரைப்படம் : ... அதிர்ச்சி தரும் அவதார் 2 டிக்கெட் கட்டணம் அதிர்ச்சி தரும் அவதார் 2 டிக்கெட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in